பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கனமழை: கோவை விமான நிலையத்தில் இடிந்து விழுந்த சுற்றுச் சுவா்

News image

கோவை விமான நிலையம்.

Updated On :56 நிமிடங்கள் முன்பு

கனமழை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரண்டு இடங்களில் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது.

கோவை சா்வதேச விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால், விமான நிலையத்தில் சின்னியம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. அதற்கு தொலைவில் இருந்த மற்றொரு சுற்றுச் சுவரும் இடிந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவைக்கு வரவிருந்த விமானங்கள் அனைத்தும் கேரளம், மாநிலம், கொச்சிக்கு திருப்பிவிடப்பட்டன.

சுற்றுச் சுவா் இடிந்து விழுந்த தகவல் அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். யாரும் ஊடுருவாத வண்ணம் சி.ஐ.எஸ்.எஃப். வீரா்களும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சீரமைப்புப் பணிகள் இரவுக்குள் நிறைவடையும் என்றும், அதன்பின் விமானங்கள் வழக்கம்போல கோவை விமான நிலையத்தில் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.