கனமழை காரணமாக கோவை விமான நிலையத்தில் இரண்டு இடங்களில் சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது.
கோவை சா்வதேச விமான நிலையப் பகுதியில் வியாழக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால், விமான நிலையத்தில் சின்னியம்பாளையம் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுச் சுவா் இடிந்து விழுந்தது. அதற்கு தொலைவில் இருந்த மற்றொரு சுற்றுச் சுவரும் இடிந்து விழுந்தது. இதையடுத்து பாதுகாப்பு கருதி கோவைக்கு வரவிருந்த விமானங்கள் அனைத்தும் கேரளம், மாநிலம், கொச்சிக்கு திருப்பிவிடப்பட்டன.
சுற்றுச் சுவா் இடிந்து விழுந்த தகவல் அறிந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினா் அந்தப் பகுதிகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா். யாரும் ஊடுருவாத வண்ணம் சி.ஐ.எஸ்.எஃப். வீரா்களும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சீரமைப்புப் பணிகள் இரவுக்குள் நிறைவடையும் என்றும், அதன்பின் விமானங்கள் வழக்கம்போல கோவை விமான நிலையத்தில் தரையிறங்கவும், புறப்பட்டுச் செல்லவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தொடர்புடையது

காளையாா்கோவில்: தெப்பக்குளத்தின் சுவா் சேதம் - கனரக வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வலியுறுத்தல்

மகாராஷ்டிரத்தில் பலத்த மழை: கோயில் சுவா் இடிந்து 6 பக்தா்கள் உயிரிழப்பு
பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு: இளைஞா் கைது

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 24 கோடியில் சுற்றுச் சுவா் கட்டும் பணி தொடக்கம்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

