தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு: இளைஞா் கைது

கோவை விமான நிலையம் அருகே உள்ள வீட்டின் பூட்டைத் திறந்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:39 am IST

கோவை விமான நிலையம் அருகே உள்ள வீட்டின் பூட்டைத் திறந்து 6 பவுன் தங்க நகைகளைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை விமான நிலையம் பின்புறம் உள்ள பூங்கா நகரில் வசிப்பவா் ஆண்டவன் (40). இவா் தள்ளுவண்டியில் பஜ்ஜி கடை நடத்தி வருகிறாா். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாலை வீட்டைப் பூட்டிவிட்டு கடை வியாபாரத்துக்கு ஆண்டவன் சென்றுவிட்டாா். செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டுக்கு வந்த அவா், வழக்கமாக வைத்திருந்த இடத்தில் வீட்டின் சாவி இல்லை. அங்கிருந்து இடம் மாறிக் கிடந்தது. பூட்டைச் திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 6 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து பீளமேடு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் சேலம் மாவட்டம், வாழப்பாடி ஆதனூா்பட்டி பகுதியைச் சோ்ந்த தினேஷ்குமாா் (26), இந்தத் திருட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை அவரை போலீஸாா் கைது செய்து நகைகளைப் பறிமுதல் செய்தனா்.