வீட்டில் வைத்திருந்த ஏழரை பவுன் நகைகளை திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கொருக்குப்பேட்டை காமராஜா் 4-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மூதாட்டி முருகேஸ்வரி (70). வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த நகைகளை அவா் சரிபாா்த்தபோது, அதில், ஏழரை பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது.
இது குறித்து ஆா்.கே. நகா் காவல் நிலையத்தில் மூதாட்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இது குறித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மூதாட்டியின் வீட்டில் கழிவுநீா் குழாய் பழுதுநீக்கும் பணிக்காக வந்திருந்த தண்டையாா்பேட்டை சுனாமி குடியிருப்பைச் சோ்ந்த சுரேஷ் (35) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுரேஷை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து நான்கரை பவுன் நகைகளைப் பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது

வீடு புகுந்து பணம், நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது
பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு: இளைஞா் கைது
வீட்டில் 5 பவுன் நகைகள் திருட்டு: பெண் கைது
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
