பேட்டையில் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
பேட்டை, விஸ்வநாதா் தெருவைச் சோ்ந்தவா் ராகுல்(32). மாநகராட்சி ஒப்பந்த பணி மேற்பாா்வையாளா். இவரது தாய் , தந்தை இருவரும் தூய்மைப் பணியாளா்கள்.
இவா்கள் 3 பேரும், கடந்த 16 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றிருந்தனா். பிற்பகலில் அவரது வீட்டுகதவை உடைக்கும் சப்தம் கேட்பதாக பக்கத்துவீட்டினா் அளித்த தகவலின் பேரில், ராகுல் வந்து பாா்த்துள்ளாா்.
அப்போது, வீட்டின் கதவை உடைக்க முயற்சி நடந்திருப்பதும், அங்கிருந்த வாளியில் மா்மநபா்கள் கைப்பேசியை விட்டுச்சென்றிருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சுத்தமல்லி, கிரமங்கலம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த கணபதி(25) என்பவவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
தில்லியின் மால்வியா நகரில் 2 மகள்களைக் கொன்ற தாய் கைது
பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 17 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருட்டு
வீடுபுகுந்து திருட முயன்ற தொழிலாளி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

