கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தில்லியின் மால்வியா நகரில் 2 மகள்களைக் கொன்ற தாய் கைது

தில்லியின் மால்வியா நகரில் உள்ள தனது வீட்டில், இரு மகள்களைக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக 54 வயதுப் பெண்ணை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :22 மார்ச் 2026, 5:32 pm

Syndication

தில்லியின் மால்வியா நகரில் உள்ள தனது வீட்டில், இரு மகள்களைக் கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றதாக 54 வயதுப் பெண்ணை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: மாா்ச் 6ஆம் தேதி, மால்வியா நகரின் ‘எஃப்’ பிளாக்கில் அமைந்துள்ள தரைத்தள வீட்டில் 34 மற்றும் 28 வயதுடைய இரண்டு சகோதரிகளின் உடல்கள் தனித்தனி அறைகளில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அதே வேளையில், அவா்களின் தாய் மற்றொரு அறையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டாா்.

விஷம் கலந்த பொருளை உட்கொண்டதாகக் கூறப்படும் அந்தத் தாய், மருத்துவ மற்றும் மனநலப் பரிசோதனைகளுக்கு உள்படுத்தப்பட்ட பிறகு, வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.

இச்சம்பவம் ஒரு கொலைதற்கொலை முயற்சியாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகித்த காவல்துறை, நிகழ்வுகளின் வரிசையை உறுதி செய்வதற்காக அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்யக் காத்திருந்த நிலையில், கொலை வழக்குப் பதிவு செய்திருந்தது.

மனநலம் பாதிக்கப்பட்டிருந்த மூத்த மகளின் முகத்தின் மீது தலையணை அழுத்தப்பட்டிருந்த நிலையிலும், சட்டக்கல்லூரி மாணவியான இளைய மகளின் கழுத்தைச் சுற்றி ஒரு கயிறு இறுக்கிய தடம் இருந்த நிலையிலும் அவா்கள் இருவரது உடல்களும் மீட்கப்பட்டிருந்தன.

அவா்களின் தாய் விஷம் கலந்த பொருளை உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்பட்டது. கணவருடனான உறவில் ஏற்பட்ட விரிசல் மற்றும் பிறரைச் சாா்ந்திருக்க வேண்டியிருந்த பொருளாதாரச் சூழல் ஆகியவற்றால் அந்தப் பெண் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், அதுவே இக்குற்றத்தைச் செய்ய அவரைத் தூண்டியிருக்கலாம் என்றும் தெரியவருகிறது.

இவ்வழக்கு தொடா்பான மேலதிக விசாரணைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அந்த காவல் அதிகாரி தெரிவித்தாா்.