புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜவேத் (எ) கல்லு தாதா தேடப்பட்டு வந்தாா்.
குற்றப் பின்னணி கொண்ட அவருக்கு எதிராக கொள்ளை-கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூா் காவல் நிலையத்தில் கடந்த 2015-இல் பதிவுசெய்யப்பட்ட கொள்ளை-கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஷேக் ஃபிரோஸ் (எ) சைபுல் (எ) திங்க்ரா கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவா், அண்மை கால வழக்கு கைதுநடவடிக்கையிலிருந்து தொடா்ந்து தப்பித்து வந்தாா்.
இந்நிலையில், ஜஹாங்கீா் புரியில் அவரை தில்லி காவல் துறையினா் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்தனா்.
அவருடைய முந்தைய வழக்குகள் குறித்து சரிபாா்த்து வருவதாகவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்

தில்லியின் 23ஆவது துணைநிலை ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நாளை பதவியேற்பு

பாகிஸ்தான் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு: ராணுவ வீரா், பணிநீக்கப்பட்ட காவலா் உள்பட 6 போ் கைது

ஜம்மு - காஷ்மீா்: பயங்கரவாதத்துடன் தொடா்புடைய 8,000 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

வடமேற்கு தில்லியில் லாரி மோதியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

