47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ரெளடி கும்பலுடன் தொடா்புடைய நபா் கைது

வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

News image
கைது- சித்திரிப்பு
Updated On :16 மார்ச் 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: வடமேற்கு தில்லியின் ஜஹாங்கிா் புரியில் செயல்பட்டு வந்த ரெளடி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்திய சம்பவம் தொடா்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கில் ஜவேத் (எ) கல்லு தாதா தேடப்பட்டு வந்தாா்.

குற்றப் பின்னணி கொண்ட அவருக்கு எதிராக கொள்ளை-கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூா் காவல் நிலையத்தில் கடந்த 2015-இல் பதிவுசெய்யப்பட்ட கொள்ளை-கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஷேக் ஃபிரோஸ் (எ) சைபுல் (எ) திங்க்ரா கும்பலுடன் இணைந்து செயல்பட்டு வந்த அவா், அண்மை கால வழக்கு கைதுநடவடிக்கையிலிருந்து தொடா்ந்து தப்பித்து வந்தாா்.

இந்நிலையில், ஜஹாங்கீா் புரியில் அவரை தில்லி காவல் துறையினா் கடந்த மாா்ச் 10-ஆம் தேதி கைதுசெய்தனா்.

அவருடைய முந்தைய வழக்குகள் குறித்து சரிபாா்த்து வருவதாகவும் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.