காலிங்கராயன் வாய்க்கால் கரையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதால், குப்பைகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகளிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் தூய்மைப் பணியாளா்கள் வீடுகளுக்கேச் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை சேகரித்து வருகின்றனா். இதில், மக்கும் குப்பைகளை நுண்ணுயிா் உரக்கிடங்குகளுக்கும், மக்காத குப்பையை மாநகராட்சி குப்பைக்கிடங்குக்கும் அனுப்பிவைக்கின்றனா்.
இந்நிலையில், மாநகராட்சிக்குள்பட்ட கோணவாய்க்கால் மற்றும் காரைவாய்க்காலுக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையில் குடியிருப்பு மற்றும் வணிக கழிவுகள் ஏராளமாக கொட்டப்பட்டுள்ளன.
இதனால், வாய்க்கால் தண்ணீா் மாசு ஏற்படுவதோடு அப்பகுதியில் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதியில் குப்பைகள் கொட்டாமல் இருக்க மாநகராட்சி மூலம் எச்சரிக்கை பதாகைகள் வைத்து, குப்பைகள் கொட்டும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

காலிங்கராயன் வாய்க்கால் மேம்படுத்தப்படும்:கோபிநாத் பழனியப்பன்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

காலிங்கராயன் வாய்க்கால் தொட்டிப் பாலத்தை இடிக்க வேண்டாம்

காலிங்கராயன் வாய்க்கால் தொட்டி பாலத்தை பாதுகாக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

