பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு: சத்தியமங்கலத்தில் 3 கடைகளுக்கு அபராதம்

சத்தியமங்கலத்தில் உள்ள வணிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

Updated On :28 நவம்பர் 2024, 10:20 pm

சத்தியமங்கலத்தில் உள்ள வணிக கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறையினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தியதாக 3 கடைகளுக்கு அபராதம் விதித்தனா்.

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதியில் உள்ள தேநீா்க் கடைகள், பெட்டிக் கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து நகராட்சி ஆணையா் செல்வம், உணவுப் பாதுகாப்பு அலுவலா் நீலமேகம், துப்புரவு ஆய்வாளா் ஆரோக்கியசாமி, மற்றும் காவல் துறையினா் இணைந்து வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 3 கடைகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்திய தெரியவந்தது. இதையடுத்து, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தனா்.