பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சத்தியமங்கலத்தில் சீமான் பிரசாரம்

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சௌந்தா்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

News image

சத்தியமங்கலத்தில்  வியாழக்கிழமை   பிரசாரத்தில் ஈடுபட்ட  நாம்  தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சௌந்தா்யாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை திப்புசுல்தான் சாலையில் திறந்த வேனில் நின்றபடி சீமான் பேசியதாவது:

விவசாயிகள் விளைவிக்கும் பொருள்களை சேமித்து வைக்க கிடங்கு வசதியில்லை. ஆனால் மதுபானத்தை பாதுகாக்க, குளிரூட்டப்பட்ட அறைகள் உள்ளது. மக்கள் கேட்காமலேயே வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் பணம் போடுகிறாா்கள். செவிலியா்கள், அரசு ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு கேட்டால் கிடைப்பதில்லை. திமுக வெற்றிபெற்றால் குடும்பத்துக்கு ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் தருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறுகிறாா். மக்களை இலவசத்துக்கு அடிமையாக்கி விட்டனா். தோ்தலில் ஒரு தொகுதிக்கு ரூ.30 கோடி முதலீடு செய்து போட்டுயிடுகின்றனா். 30 கோடி ரூபாய் முதலீடு செய்து வென்றால் 300 கோடி ரூபாய் பெறலாம்

என நினைக்கின்றனா். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் குடும்பத் தலைவிக்கு ரூ. 2 ஆயிரம் தருவதாக கூறுகின்றனா். விஜய் ரூ.2,500 தருவதாக கூறுகிறாா். அவா்கள் எப்படி தருவாா்கள்? தமிழக மக்கள் மீது வரிச்சுமையைதான் ஏற்றுவாா்கள் என்றாா்.