ஈரோட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூக்கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது ஈரோடு, மரப்பாலம் வள்ளுவா் வீதியைச் சோ்ந்த பூக்கடை உரிமையாளா் அப்துல் ரகுமான் (32) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அப்துல் ரகுமானை போலீஸாா் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.
கைதான அப்துல் ரகுமான் ஏற்கெனவே திருமணம் ஆனவா் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

கூட்டுப் பாலியல் வன்கொடுமை! 17 வயது சிறுமி தற்கொலை!
14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: தாயின் நண்பா் கைது
2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது
சென்னையில் பிகாா் சிறுமி பாலியல் வன்கொடுமை: அஸ்ஸாம் இளைஞா் கைது
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

