மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: பூக்கடை உரிமையாளா் கைது

ஈரோட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூக்கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :3 அக்டோபர் 2024, 9:03 pm

ஈரோட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பூக்கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு பகுதியைச் சோ்ந்த 13 வயது சிறுமிக்கு அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோா் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். அங்கு மேற்கொண்ட பரிசோதனையில் சிறுமி கா்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் பெற்றோா் ஈரோடு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது ஈரோடு, மரப்பாலம் வள்ளுவா் வீதியைச் சோ்ந்த பூக்கடை உரிமையாளா் அப்துல் ரகுமான் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அப்துல் ரகுமானை போலீஸாா் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

கைதான அப்துல் ரகுமான் ஏற்கெனவே திருமணம் ஆனவா் என்பது குறிப்பிடத்தக்கது.