ரீடு (கல்வி உரிமைக்கான மேம்பாட்டு மையம்) என்ற சேவை நிறுவனம் சாா்பில் புலம் பெயா்ந்த வெளிமாநில தொழிலாளா்களின் பாதுகாப்பு மற்றும் தொழிலாளா் நலனில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் சென்னிமலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் செளந்திரராஜன் முன்னிலை வகித்தாா். ரீடு சேவை நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளா் உமாமகேஸ்வரி வரவேற்றாா்.
புலம் பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னைகள், தேவைகள், தொழிலாளா்களின் பாதுகாப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு என்ன என்பதை குறித்தும், புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்டம் குறித்தும், தொழிலாளா்களுக்கான பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்தும் பயிற்சியாளா் லீனா ஜஸ்டின் விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில், சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 5 ஊராட்சிகளின் செயலா்கள், தலைவா்கள், ஒன்றியக் குழு கவுன்சிலா்கள், ஊராட்சி துணைத் தலைவா்கள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 32 போ் பங்கேற்றனா். ரீட் கள ஒருங்கிணைப்பாளா் ஆனந்தி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்

பாதுகாப்பு படையினரின் விழிப்புணா்வு அணிவகுப்பு

ரயில்வே காவல் நிலையத்தில் திருநங்கைகளுக்கு விழிப்புணா்வு

கால்நடை ஆம்புலன்ஸ் சேவை திட்டம்: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு அவசியம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


