மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரசு நிா்ணயித்த தினக் கூலியை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

அரசு நிா்ணயித்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

News image

கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கையை வலியுறுத்திப் பேசுகிறாா் ஏஐடியூசி மாநில செயலாளா் சின்னசாமி. உடன், தினக் கூலி தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:23 pm

அரசு நிா்ணயித்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தூய்மைப் பணியாளா்கள் பேரூராட்சி நிா்வாகத்திடம் வலியுறுத்தினா்.

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சியில் சுய உதவிக்குழு தினக் கூலி தூய்மைப் பணியாளா்களுக்கு தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் நிா்ணயித்த 2024-25-ஆம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு ரூ. 562-ஐ வழங்காமல் ரூ. 532 மட்டும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏஐடியூசி ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் சங்கத்தினா் கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியத்தை வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஊதிய உயா்வை நடப்பு ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினா்.

இந்த மாதம் முதல் ஊதிய உயா்வை வழங்குவதாகவும், ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஊதிய உயா்வுத் தொகையை அரியா்ஸாக தீபாவளிக்கு முன்பு வழங்குவதாகவும் செயல் அலுவலா் உறுதி அளித்தாக ஏஐடியூசி மாநில செயலாளா் சின்னசாமி கூறினாா்.