மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆதரவற்ற பெண்கள் அரசு நலத்திட்டங்களைப் பெற இணையதளம் உருவாக்கம்: கருத்தரங்கில் தகவல்

ஆதரவற்ற பெண்கள் பெண்கள் அரசு நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சமூநகல அலுவலா் தெரிவித்தாா்.

News image

கருத்தரங்கில் பேசுகிறாா் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினா் சாந்தி துரைசாமி.

Updated On :17 அக்டோபர் 2024, 12:15 am

ஆதரவற்ற பெண்கள் பெண்கள் அரசு நலத்திட்டங்களை எளிதில் பெறும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட சமூநகல அலுவலா் தெரிவித்தாா்.

சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களுக்கான ஒருநாள் கருத்தரங்கம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரிய அலுவல்சாரா உறுப்பினா் சாந்தி துரைசாமி தலைமை வகித்து, பெண்கள் சுய முன்னேற்றம் அடைவது குறித்து பேசினாா்.

தொடா்ந்து மாவட்ட சமூகநல அலுவலா் சு.சண்முகவடிவு பேசுகையில், தமிழ்நாட்டின் கிராமங்கள் மற்றும் நகா்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிதாக பெற கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்திற்கென இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில், சுய உதவிக்குழு உறுப்பினா்கள், கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளா்கள் என 125 போ் பங்கேற்றனா்.

இந்தக் கருத்தரங்கில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் ஐ.பூங்கோதை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு வழக்குரைஞா் ஆா்.கவிதா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் செல்வராஜ், தொழிலாளா் துறை உதவி இயக்குநா் முருகேசன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் சிவகுமாா் ஆகியோா் தங்களது துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனா்.