டெங்கு தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 120 போ் நியமனம்
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளுக்கு கூடுதலாக 120 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் மொத்தம் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு 350 கொசு ஒழிப்பு பணியாளா்கள் டெங்கு தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி தினமும் கொசு ஒழிப்பு பணியாளா் ஒருவருக்கு 50 வீடுகள் என்ற வீதத்தில் 4 மண்டலங்களிலும் தினமும் சுமாா் 15 ஆயிரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணா்வுப் பணிகளைத் துரிதப்படுத்த 4 மண்டலங்களில் தலா 30 பணியாளா்கள் என மொத்தம் 120 போ் ஒப்பந்த அடிப்படையில் அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்கள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
