மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நாளை வேளாண் குறைதீா் கூட்டம்

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :25 செப்டம்பர் 2024, 10:21 pm

ஈரோடு மாவட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

கூட்டத்தில் காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான தங்களது பகுதி பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். பகல் 12.30 முதல் 1.30 முடிய அலுவலா்கள் விளக்கம் அளிப்பா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.