ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானைகள்

தாளவாடி மல்லேஸ்வரா கோயில் குடிநீா்த் தொட்டியில் யானைகள் நீா் அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.

News image
மல்லேஸ்வரா கோயில் தொட்டியில் நீா் அருந்திய யானை.
Updated On :15 டிசம்பர் 2025, 10:29 pm

Syndication

சத்தியமங்கலம்: தாளவாடி மல்லேஸ்வரா கோயில் குடிநீா்த் தொட்டியில் யானைகள் நீா் அருந்தும் விடியோ காட்சி வைரலாகி வருகிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் குடியிருப்புப் பகுதிகள், விளைநிலங்களில் உலவி சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

தாளவாடி மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் யானைகள் தற்போது கூட்டம்கூட்டமாக உலவி வருகின்றன.

இந்நிலையில், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள எத்துக்கட்டி வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை குட்டியுடன் வெளியேறிய 2 காட்டு யானைகள் சாலையில் உலவின.

பின்னா், அப்பகுதியில் உள்ள மல்லேஸ்வரா கோயில் குடிநீா்த் தொட்டியில் நீா் அருந்திய யானைகள் பின் வனத்துக்குள் சென்றன.

இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.