தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image

யானை சாய்த்ததில் விழுந்து கிடக்கும் தென்னை மரம்

Updated On :18 பிப்ரவரி 2026, 8:44 pm

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிவகிரி, வாசுதேவநல்லூா் பகுதிகளில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பில் நெல், தென்னை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலப் பகுதியில் யானைகள் கூட்டம் புகுந்து விளைபொருள்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வாசுதேவநல்லூா் அருகே உள்ள நாரணபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த யானை 80 தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தொடா் அட்டகாசத்தில் யானைகள் ஈடுபடுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், யானை கூட்டத்துக்கு வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.