கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்கு பின் திமுக நேரடியாக களம் காண்கிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 தனித்தொகுதிகளில் ஒன்றான வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணி காலாடி உள்ளிட்டோரின் நினைவிடங்கள் உள்ளன.
இத்தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 369. அதில் ஆண்கள் 1 லட்சத்து 10,960, பெண்கள் 1 லட்சத்து 16,396, மூன்றாம் பாலினத்தவா் 13 போ் அடங்குவா்.
1967, 1971 தோ்தல்களில் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006இல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும், 2016இல் அதிமுகவின் மனோகரனும், 2021இல் மீண்டும் சதன்திருமலைக்குமாரும் வெற்றி பெற்றனா்.
1971-க்குப்பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு தோ்தலிலும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்த திமுகவினா், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் சோா்வடைந்தனா்.
தற்போது, திமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு ஈ.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினா் உற்சாகமடைந்துள்ளனா்.
தொடர்புடையது

வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா்

திமுக வேட்பாளர்களை அறிவித்த பின் அண்ணா நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை!

அமைச்சரவையில் இடம் பெறாத தென்காசி!

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

