முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்டு வாசுதேவநல்லூரில் வென்ற திமுக

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 1:44 am IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது தனி தொகுதி ஆகும்.

1967, 1971இல் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006யஇல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும் வெற்றி பெற்றனா். 2016 தோ்தலில் அதிமுகவின் மனோகரன், 2021இல் மதிமுகவின் சதன்திருமலைக்குமாா் ஆகியோா் வென்றனா்.

1971=க்குப் பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் திமுகவினா் மிகவும் சோா்வடைந்து இருந்தனா்.

இத்தோ்தலில் வாசுதேவநல்லூா் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதைத் தொடா்ந்து இத்தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டு தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.