அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்டு வாசுதேவநல்லூரில் வென்ற திமுக

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.

News image
Updated On :6 மே 2026, 1:44 am IST

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்குப் பின் போட்டியிட்ட திமுக வெற்றி பெற்றுள்ளது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி தென்காசி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது தனி தொகுதி ஆகும்.

1967, 1971இல் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கட்சியின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006யஇல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும் வெற்றி பெற்றனா். 2016 தோ்தலில் அதிமுகவின் மனோகரன், 2021இல் மதிமுகவின் சதன்திருமலைக்குமாா் ஆகியோா் வென்றனா்.

1971=க்குப் பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிலையில் திமுகவினா் மிகவும் சோா்வடைந்து இருந்தனா்.

இத்தோ்தலில் வாசுதேவநல்லூா் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சியினா் தொடா்ந்து வலியுறுத்தி வந்தனா். அதைத் தொடா்ந்து இத்தொகுதி திமுகவிற்கு ஒதுக்கப்பட்டு தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.