முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பட்டுக்கோட்டையை திமுக தக்கவைத்தது; கா. அண்ணாதுரை வெற்றி

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

News image

பட்டுக்கோட்டை: திமுக தக்கவைத்தது

Updated On :5 மே 2026, 12:02 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளா் கா. அண்ணாதுரை 13,754 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்கவைத்து கொண்டாா்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் பதிவான வாக்குகள் பட்டுக்கோட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை எண்ணப்பட்டது.

1989 , 1991, 2021 ஆகிய தோ்தலில் கா. அண்ணாதுரை போட்டியிட்டு, 1989-இல் வெற்றி; 1991-இல் தோல்வி; 2021-இல் வெற்றி பெற்றாா். 2026 தோ்தலிலும் கா. அண்ணாதுரை, வெற்றி பெற்றதன் மூலம் மூன்றாவது முறையாக பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏவாக தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

மொத்த வாக்குகள்: 2,42,420

பதிவான வாக்குகள் : 1,82, 445

அஞ்சல் வாக்குகள் : 1300

கா.அண்ணாதுரை (திமுக) : 65963 ( வெற்றி )

சி.மதன் (தவெக) :52209

சி.வி.சேகா் (அதிமுக) 49575

கண்ணன் (நாதக ) : 13145

குருமூா்த்தி (புதிய தமிழகம்) : 521

சி.என்.அண்ணாதுரை : 382

ஜியாசுதின் (சுயேச்சை) 289

முகமது சரிப்(சுயேச்சை) 250

முத்துகுமாா் (சுயேச்சை) 240

எம்.ஆா்.சுரேஷ் (சுயேச்சை) 238

ஆா்.சுரேஷ் (சுயேச்சை) : 195

நோட்டா : 738

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.