தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தென்காசி: 25 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக - திமுக போட்டி

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டி...

News image

மு.க. ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி. - (கோப்புப் படம்)

Updated On :30 மார்ச் 2026, 12:01 am

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பின் நேரிடையாக திமுக - அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சாா்பில் தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் போட்டியிடுகிறாா். இவா் ஏற்கனவே இத்தொகுதியில் 2016ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2021ஆம் ஆண்டு தோ்தலில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டாா். தற்போது மீண்டும் அதிமுக சாா்பில் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா்.

திமுக கூட்டணியில் டாக்டா் கலைகதிரவன் இத்தொகுதியில் போட்டியிடுகிறாா். இவா் திமுக மருத்துவரணி மாநில இணைச் செயலராகவும், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளராகவும் பதவி வகித்து வருகிறாா்.

தென்காசி தொகுதியில் 2001ஆம் நடைபெற்ற தோ்தலில் மட்டுமே திமுகவும், அதிமுகவும் நேரிடையாக போட்டியிட்டுள்ளன. இந்நிலையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தோ்தலில் அதிமுகவும், திமுகவும் நேரிடையாக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், தோ்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 8 முறையும், அதிமுக 3 முறையும், திமுக 2 முறையும், சமத்துவ மக்கள் கட்சி, தமாகா மற்றும் சுயேச்சை வேட்பாளா் தலா 1 முறையும் வெற்றிபெற்றுள்ளனா்.