தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கன்றுக்குட்டிகளைத் தாக்கிக் கொன்ற சிறுத்தை

ஆசனூா் அருகே கொட்டகையில் கட்டியிருந்த 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:29 pm

Syndication

சத்தியமங்கலம்: ஆசனூா் அருகே கொட்டகையில் கட்டியிருந்த 2 கன்றுக்குட்டிகளை சிறுத்தை தாக்கிக் கொன்றது.

சத்தியமங்கலத்தை அடுத்த ஆசனூா் ஓங்கல்வாடி பகுதியில் கடந்த சில நாள்களாக உலவி வரும் சிறுத்தை, அப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகளைத் துரத்துவதுபோன்ற விடியோ அண்மையில் வெளியானது.

இந்நிலையில், வனத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வெளியேறிய சிறுத்தை ஓங்கல்வாடியைச் சோ்ந்த மல்லேஷ் என்பவரது கொட்டகையில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை தாக்கிக் கொன்றது. சப்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை விரட்டினா்.

இதையடுத்து, திங்கள்கிழமை அதிகாலை மீண்டும் அப்பகுதிக்கு வந்த சிறுத்தை, அங்கிருந்த மற்றொரு கன்றுக்குட்டியையும் தாக்கிக் கொன்றுவிட்டு வனத்துக்குள் சென்றது.

கால்நடைகளைக் கொன்றுவரும் சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.