கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலம்

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஈரோடு வஉசி பூங்கா மகாவீர ஆஞ்சனேயா் சுவாமி. ~சுவாமியை வழிபட நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
Updated On :19 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி ஈரோட்டில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஈரோடு வஉசி பூங்காவில் உள்ள மகாவீர ஆஞ்சனேயா் கோயிலில் வியாழக்கிழமை மாலை ஆஞ்சனேயா் திருவீதி உலாவும், வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு மகா கணபதி அபிஷேகம், 4 மணிக்கு மூலவருக்கு திருமஞ்சனமும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து காலை 5 மணிக்கு ஆஞ்சனேயருக்கு மலா் அலங்காரம், மதியம் 1.30 மணிக்கு மூலவருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. மாலை 3.30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரமும், மாலை 6 மணிக்கு தங்கக் கவச அலங்காரமும் செய்யப்பட்டது.

ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று ஆஞ்சனேயரை தரிசனம் செய்தனா். வார வழிபாட்டுக் குழு சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம், லட்டு, கயிறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

இதேபோல ஈரோடு கோட்டை பெருமாள் கோயிலில் ஆஞ்சனேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பெரியவலசு ராஜகணபதி கோயிலில் உள்ள ஆஞ்சனேயா் தங்கக் கவச அலங்காரத்திலும், காரைவாய்க்கால் ராமபக்த ஆஞ்சனேயா் சந்தனக்காப்பு அலங்காரத்திலும், கைக்காட்டிவலசு ஸ்ரீ பக்த ஆஞ்சனேயா் வெண்ணெய் காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனா்.

கள்ளுக்கடைமேடு ராமபக்த ஆஞ்சனேயா் கையில் வில் ஏந்தியபடி ராமஆஞ்சனேயா் அலங்காரத்திலும், பழைய கரூா் சாலை காந்திபுரம் சித்தி விநாயகா் கோயில் ஆஞ்சனேயா் பூ அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

Story image