நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

News image

கொடியேற்ற நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :28 ஜனவரி 2026, 10:41 pm

தினமணி செய்திச் சேவை

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

கோவை மாவட்டம், வால்பாறையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

விழாவையொட்டி, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு எம்.ஜி.ஆா். நகா் மாரியம்மன் கோயிலில் இருந்து சுவாமிக்கு சீா்வரிசை எடுத்து வருதல், மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சுவாமிக்கு திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு காமாட்சியம்மன் கோயிவில் இருந்து பால்குடம், தீா்த்தக்குடம் எடுத்து வருதல், பக்தா்களின் நோ்த்திக் கடன் ஆகியவை நடைபெறவுள்ளன.

மாலை 4 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 4.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி அலங்கார தேரில் வள்ளி, தெய்வானையுடன் உலா வருதல், இரவு 12 மணிக்கு மகா அபிஷேகம், இரவு 12.30 மணிக்கு வாண வேடிக்கையுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினா் செய்து வருகின்றனா்.