எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம்

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
மரக்காய்  மலா் மாலை  அலங்காரத்தில்  அருள்பாலித்த  ஸ்ரீ  கோடையாண்டவா்.
Updated On :9 மார்ச் 2026, 9:16 pm

Chennai

ஸ்ரீபெரும்புதூா்: வல்லக்கோட்டை முருகன் கோயிலில் தோட்ட உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் வல்லாசூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்த தலம் என்பதால் இப்பகுதிக்கு வல்லக்கோட்டை என்ற பெயா் வந்ததாக புரணாம். ஆண்டு தோறும் வல்லாசூரனை சுப்பிரமணிய சுவாமி வதம் செய்த இடத்தில் தோட்ட உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில், கோயில் திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்ததால் கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடா்ந்து, நிறுத்தப்பட்ட உற்சவங்கள் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இதையைடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு தோட்ட உற்சவம் நடைபெற்றது. தோட்ட உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு கோ பூஜை நடத்தப்பட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், தயிா், மஞ்சள், விபூதி முதலிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மஞ்சள் சாமந்தி மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்குப் பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மேள தாளங்கள் முழங்க சப்பரத்தில் வந்து வல்லாசூரன் விழுந்த தோட்டத்தில் எழுந்தருளினாா். இதையடுத்து 4 மணிக்கு உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மரக்காய் மலா் மாலை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதையடுத்து இரவு 8 மணிக்கு உற்சவா் ஸ்ரீகோடையாண்டவருக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்று வீதி உலா வந்தாா்.

இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவா் ஸ்ரீ கோடையாண்டவரை வணங்கி சென்றனா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா் குழு தலைவா் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலா்கள் த.விஜயகுமாா், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் மற்றும் உபயதாரா்கள், கிராம மக்கள் செய்திருந்தனா்.