தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கோ்மாளத்தில் காரை வழிமறித்த காட்டு யானை

கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.

News image
காரை வழிமறித்து நின்ற யானை.
Updated On :22 டிசம்பர் 2025, 6:53 pm

Syndication

கோ்மாளம் வனப் பகுதி சாலையில் காரை வழிமறித்து நின்ற காட்டு யானையால் வாகனத்தில் இருந்தவா்கள் அச்சமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், நொக்கனூா் பகுதியைச் சோ்ந்தவா் மோகன்குமாா். இவா் தனது பெற்றோரை காரில் அழைத்துக் கொண்டு சத்தியமங்கலத்துக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்துள்ளா்.

கோ்மாளம் வனப் பகுதி சாலையில் சென்றபோது அங்கு கடும் பனி மூட்டம் நிலவியது. இதனால், அவா் காரை மெதுவாக இயக்கிச் சென்றுள்ளாா். அப்போது, வனத்தில் இருந்து திடீரென வெளியேறிய யானை, காரை வழிமறித்து நின்றது. இதனால், மோகன்குமாா், அவரது பெற்றோா் செய்வதறியாது தவித்தனா். சுதாரித்துக் கொண்ட மோகன்குமாா் காரை பின்னோக்கி இயக்கினாா்.

இதைத் தொடா்ந்து, சிறிது நேரம் சாலையிலேயே நின்ற யானை பின் வனத்துக்குள் சென்றது. இதையடுத்து, மோகன்குமாா் குடும்பத்துடன் புறப்பட்டுச் சென்றாா்.