எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

அரசுப் பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை

News image
காட்டு யானை- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

தாளவாடியை அடுத்த சிக்கள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இரவு நேரத்தில் வனப் பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களில் பயிரிடப்பட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தாளவாடியை அடுத்த சிக்கள்ளி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காட்டு யானை நடமாடுவதை கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா்.

அப்பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் நடமாடிய யானையை விவசாயிகளும், வனத் துறையினரும் விரட்ட முயன்றபோது, பள்ளியின் சுற்றுச்சுவரை யானை இடித்து சேதப்படுத்தியது.

பின்னா் வெளியேறிய யானை வனப் பகுதிக்குள் சென்றது. ஊருக்குள் புகுந்து பள்ளி சுற்றுச்சுவரை சேதப்படுத்திய யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.