/
தாளவாடியை அடுத்த ஆனந்தபுரம் கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை பகல் காட்டு யானை நுழைந்ததால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
கோடைக் காலம் தொடங்கியதையடுத்து, சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு, குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகளில் உலவுவது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தாளவடி மலைப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை, ஆனந்தபுரம் கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்து, வீடுகளிலேயே முடங்கினா். இது குறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சுமாா் 1 மணி நேரம் போராடி யானையை வனத்துக்குள் விரட்டினா்.
தொடர்புடையது

ஆசனூா் மலைப் பகுதியில் செயல்படும் தங்கும் விடுதிக்குள் நுழைந்த யானை! கிராம மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சம்!

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



