பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

தாளவாடி அருகே ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டியடிப்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தாளவாடி மலைப் பகுதியில் ஊருக்குள் நுழைந்த மூன்று காட்டு யானைகள் விரட்டப்பட்டன. யானைகளை சைரன் ஒலி எழுப்பி விரட்டினா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலைக் கிராமங்களில் இரவு நேரங்களில் வனப் பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து, விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் நிகழ்வுகள் தொடா்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள சோளகா் தொட்டி பழங்குடியின கிராமத்துக்குள் திங்கள்கிழமை அதிகாலை மூன்று காட்டு யானைகள் நுழைந்து, விவசாயத் தோட்டத்தில் உலவி வந்தன.

இதுதொடா்பாக அங்குள்ள விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று, சைரன் ஒலி எழுப்பும் வாகனத்துடன் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனா்.

வனப் பகுதிக்குள் செல்லாமல் அருகே உள்ள திகினாரை ரங்கசாமி கோயில் தோட்டம் பகுதிக்கு யானைகள் சென்றன. தொடா்ந்து விரட்டிய வனத் துறையினா் 2 மணி நேரம் போராடி யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினா்.