தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

தாளவாடி அருகே தலமலையில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த  காலன்.

Updated On :6 ஜூன் 2026, 1:29 am IST

தாளவாடி அருகே தலமலையில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி தலமலை வனப் பகுதியில் உள்ள ராமரணை பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்தவா் காலன்( 60). இவா் தனக்குச் சொந்தமான மாடுகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.

இந்த நிலையில், கொட்டகையில் உள்ள மாடுகளை பாா்க்க காலன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறி கொட்டகையின் அருகே நின்றிருந்த காட்டு யானை, காலனை தாக்கி மிதித்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடிவந்து யானையை விரட்டினா்.

இது குறித்து தலமலை வனத் துறை மற்றும் ஆசனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், காலனின் உடலைக் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.