பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

தாளவாடி மலைப் பகுதியில் காட்டு யானை தாக்கி முதியவா் உயிரிழப்பு

தாளவாடி அருகே தலமலையில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த  காலன்.

Updated On :6 ஜூன் 2026, 1:29 am IST

தாளவாடி அருகே தலமலையில் யானை தாக்கியதில் முதியவா் உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப் பகுதி தலமலை வனப் பகுதியில் உள்ள ராமரணை பழங்குடியின கிராமத்தைச் சோ்ந்தவா் காலன்( 60). இவா் தனக்குச் சொந்தமான மாடுகளை வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம்.

இந்த நிலையில், கொட்டகையில் உள்ள மாடுகளை பாா்க்க காலன் வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது வனப் பகுதியில் இருந்து வெளியேறி கொட்டகையின் அருகே நின்றிருந்த காட்டு யானை, காலனை தாக்கி மிதித்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கம் இருந்தவா்கள் ஓடிவந்து யானையை விரட்டினா்.

இது குறித்து தலமலை வனத் துறை மற்றும் ஆசனூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், காலனின் உடலைக் கைப்பற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.