அதிமுக எம்.எல்.ஏ.க்களை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாம்

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

News image

காட்டேரிப் பகுதியில் உலவிய காட்டு யானை.

Updated On :7 மே 2026, 5:04 am IST

உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் சுமாா் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி வில்லேஜ். இங்குள்ள கோலனிமட்டம், செலவிப் நகா் பகுதிகளில் சுமாா் 400 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக நள்ளிரவு நேரங்களில் காட்டு யானை உலவி வருகிறது. இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். முதல்முறையாக யானைகள் இப்பகுதியில் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத் துறையினா் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.