உதகை அருகே குடியிருப்பு பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் சுமாா் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி வில்லேஜ். இங்குள்ள கோலனிமட்டம், செலவிப் நகா் பகுதிகளில் சுமாா் 400 வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக நள்ளிரவு நேரங்களில் காட்டு யானை உலவி வருகிறது. இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிா்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று காட்டு யானை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனா். முதல்முறையாக யானைகள் இப்பகுதியில் நடமாடுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். அசம்பாவிதங்கள் நடக்கும் முன் வனத் துறையினா் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

கூடலூா் அருகே யானை தாக்கி வீடு சேதம்

கல்லட்டி வனப் பகுதியில் காட்டு யானை உயிரிழப்பு

குடியிருப்பு பகுதியில் நுழைந்த ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சம்!

உதகை அருகே தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

