நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!அப்டேட் ஆன அம்மா உணவகம்! தவெக அரசின் வருகையால் புத்துயிர் பெற்றது!நாட்டில் சரி பாதி முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள்!தூங்கிக் கொண்டிருப்பது யார்? திமுகவுக்கு தவெக விளக்கம்தேனிலவு கொலை: சோனம் ரகுவன்ஷி நீதிமன்றத்தில் சரண்செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு! சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே!
/

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?

வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு என்பது பற்றி..

News image

வாக்குச்சாவடி - DPS

Updated On :25 ஏப்ரல் 2026, 12:57 pm IST

ஒவ்வொரு தேர்தலின்போதும், முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடைபெறுகிறது.

ஆனால், வாக்குப்பதிவு முடிந்ததும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துக்கொண்டு வாக்கு எண்ணும் மையங்களில் சேர்ப்பித்துவிட்டால் அவர்களது கடமை நிறைவடைந்தது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதில் காவல்துறையினர் முழு கவனமும் இருக்கும்.

ஆனால், வாக்குச்சாவடியாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு பள்ளி அதன்பிறகு எப்படி இருக்கும் என்பதை பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை.

பள்ளிச் சுவர் முழுக்க வாக்குச்சாவடி எண்கள், பாகம் எண், வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் வேட்பாளர்களின் பட்டியல் என அனைத்தும் ஒட்டப்பட்டு பாதி கிழித்தும் பாதி கிழிக்காமலும் விடப்படும்.

இவற்றை சுத்தம் செய்து மீண்டும் பள்ளி புதுப்பொலிவுடன் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் செய்து தர வேண்டும் என்றாலும், அதனை உறுதி செய்வது முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பாக மாறி விடுகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் இந்த முறை 250 முதல் 350 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில் பெரும்பாலானவை பள்ளிகள்தான். வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு முந்தைய நாளிலேயே பள்ளி வளாகம் முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டுவிட்டன. மறுநாள் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களும் உணவுப் பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள், தேநீர் கப்புகளை ஆங்காங்கே வீசி எறிந்திருந்தனர்.

குப்பைகளைக் கூட அப்புறப்படுத்திவிடலாம், பள்ளிச் சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை அப்புறப்படுத்துவதுதான் சவாலாக மாறுகிறது. உயரத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை அப்புறப்படுத்தாமலேயே விட்டுவிடுகிறார்கள்.

ஒரு சில இடங்களில் போஸ்டர்களை பிரிக்கும்போது பெயிண்டோடு சேர்ந்து வந்துவிடுகிறது. இதனால் சுவர்கள் மோசமாக சேதமடைகின்றன. அதனை சரி செய்யும் பொறுப்பும் பள்ளி நிர்வாகத்தை சேர்கிறது.

பள்ளியை வாக்குச்சாவடிக்காகப் பயன்படுத்தும் அதிகாரிகள் யாருமே, அந்தப் பள்ளியை மீண்டும் பழைய நிலையில் விட்டுச் செல்ல வேண்டும் என்ற பொறுப்பை எடுத்துக் கொள்வதில்லை. கழிப்பறைகளையும், வாக்குச்சாவடிக்காகப் பயன்படுத்திய வகுப்பறைகளையும் பார்க்க மோசமாக இருக்கின்றன.

வாக்குச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களே, இரண்டு நாள்களாக தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை பத்திரமாக சேர்த்துவிட்டு, வீடு திரும்புவதற்கே நேரமாகிவிடும்.

எனவே, தேர்தல் ஆணையமே இதற்கான தீர்வை காண வேண்டும். பள்ளிகளை தேர்வு செய்து வாக்குச்சாவடிக்காக நியமிக்கும் அதிகாரிகளே, அதனை சுத்தம் செய்து பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பணிகளையும் உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொள்கிறார்கள்.

Summary

About who is responsible for cleaning schools that are used as polling stations..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.