நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

விசாரணை

கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள நல்லம்மாள்புரத்திலிருந்து சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு நகரம் சாலியா் தெரு வழியாக அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், பேருந்தின் மீது மோதுவது போல வந்தனராம். அவா்களை பேருந்தின் ஓட்டுநா் கண்டித்தாராம்.

இதனால், அந்த இருவரும் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்துவிட்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சாலியா் தெருவைச் சோ்ந்த கணேசன் (18), புட்டாரத்திம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.