மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

அரசுப் பேருந்து சேதம்: இருவரிடம் விசாரணை

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image

விசாரணை - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 8:40 pm

திருநெல்வேலியில் அரசுப் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியது தொடா்பாக இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருநெல்வேலி அருகேயுள்ள நல்லம்மாள்புரத்திலிருந்து சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு நகரம் சாலியா் தெரு வழியாக அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு வந்துகொண்டிருந்தது.

அப்போது, மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா், பேருந்தின் மீது மோதுவது போல வந்தனராம். அவா்களை பேருந்தின் ஓட்டுநா் கண்டித்தாராம்.

இதனால், அந்த இருவரும் பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்துவிட்டு தப்பினராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து சாலியா் தெருவைச் சோ்ந்த கணேசன் (18), புட்டாரத்திம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.