அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சத்தியமங்கலம் வனப் பகுதி சாலையில் நடமாடிய புலி

சத்தியமங்கலம் வனப் பகுதியில் சாலையில் நடமாடிய புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

News image
கோ்மாளம்  சாலையில்  நடமாடிய  புலி.
Updated On :8 நவம்பர் 2025, 2:57 am

Syndication

சத்தியமங்கலம் வனப் பகுதியில் சாலையில் நடமாடிய புலியால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட ஆசனூா்-கோ்மாளம் சாலையில் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த நபா்கள்

வெள்ளிக்கிழமை அதிகாலை காரில் சென்று கொண்டிருந்தனா். அரேப்பாளையம் அருகே வனப் பகுதி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென சாலையின் குறுக்கே புலி நடமாடி உள்ளது.

இதை அவா்கள் தங்களது கைப்பேசியில் விடியோ பதிவு செய்தனா். காரின் முகப்பு விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும் புலி சாலையோர வனப் பகுதிக்குள் குதித்தோடி மறைந்தது.

புலி நடமாட்டத்தை அறிந்த வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா். இரவு நேரங்களில் வனப் பகுதி சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.