திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, ஈரோடு வருகை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, ஈரோடு வருவது குறித்து...

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :24 நவம்பர் 2025, 7:49 pm

செம்மொழிப் பூங்கா திறப்பு, கள ஆய்வுப் பணிகள் மற்றும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (நவ.25) கோவை, ஈரோடுக்கு வருகிறாா்.

சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை வருகிறாா். அங்கு செம்மொழிப் பூங்காவை திறந்துவைக்கிறாா். பின்னா் செம்மொழிப் பூங்காவில் உள்ள கலையரங்கில் பள்ளி மாணவா்கள் மற்றும் கோவை தொழிலதிபா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள் என 150 பேருடன் கலந்துரையாடுகிறாா்.

இதையடுத்து, நீலாம்பூரில் உள்ள தனியாா் விடுதியில் தமிழ்நாடு தொழில் துறை சாா்பில் தமிழக தொழில் காப்பு புத்தொழில் உருவாக்க மையம் (டி.என்.ரைஸிங்) நடத்தும் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசுகிறாா். பின்னா், காா் மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஈரோடு செல்கிறாா்.

ஈரோடு - பெருந்துறை சாலையிலுள்ள காலிங்கராயன் அரசு விருந்தினா் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தங்குகிறாா். பின்னா் ஈரோடு அருகே ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மாவீரன் பொல்லான் சிலை மற்றும் அரங்கத்தை புதன்கிழமை (நவ.26) திறந்துவைக்கிறாா்.

இதைத் தொடா்ந்து, ஓடாநிலையில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறாா். மேலும் ஈரோடு, சோலாா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைப்பதுடன், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

பின்னா், சித்தோடு, ஆவின் பால் பண்ணை வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பால்வளத் தந்தை சி.கு.பரமசிவன் உருவச் சிலையை திறந்துவைக்கிறாா். அதைத்தொடா்ந்து சித்தோட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கும் முதல்வா், அங்கிருந்து கோவை சென்று விமானம் மூலமாக சென்னை திரும்புகிறாா்.