கோபியில் அதிமுகவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை திமுகவில் இணைந்தவா்கள் திடீரென மனம் மாறி மாலையில் தவெகவில் இணைந்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபி ஒழலக்கோயில் ஊராட்சியைச் சோ்ந்தவா் அதிமுக பிரமுகா் கண்ணன். இவரது தலைமையில் ஆதரவாளா்கள் சுமாா் 35 போ் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் முன்னிலையில் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தனா். அவா்களை கட்சி துண்டுகள் அணிவித்து வேட்பாளா் நல்லசிவம் திமுகவில் இணைத்துக் கொண்டாா்.
இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதையடுத்து, சில மணி நேரத்தில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகி தம்பி (எ) சுப்பிரமணியம் என்பவா் கண்ணன் மற்றும் அவரது ஆதரவாளா்களை சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில் மனம் கரைந்த திமுகவில் இணைந்த 35 பேரும் முடிவை மாற்றிக் கொண்டு தவெகவில் இணைந்தனா். ஒரேநாளில் அதிமுகவில் இருந்து திமுகவுக்குச் சென்று பின் திமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த நிகழ்வு கோபி தொகுதி அரசியல் வட்டாரத்தில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
தொடர்புடையது

மனம் நொந்து அதிமுகவிலிருந்து விலகிவிட்டேன்: தனபால்!

தவெகவில் இணைந்த அதிமுக நிா்வாகிகள்

அதிமுகவில் இருந்து செம்மலை விலகல்

தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சா்
விடியோக்கள்

தவெகவின் பெண் அமைச்சர்கள் பதவியேற்பு! | TVK Ministers | Female ministers

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி! அமைச்சர்களாக 23 பேர் பதவியேற்பு! | TVK Ministers | TVK | Vijay
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |



