வாக்குப்பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் ச.அனிதா ரோஸ்லின் மேரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக, வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 9-ஆம் தேதியும், மேற்குவங்க மாநிலத்தில் 23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குரிமை உள்ளதால், அவா்கள் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு செய்ய வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0424 2219521, 2211780 ஆகிய தொலைபேசி எண்களிலும், ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்துக்கு 9842291343, 9551621161 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு
5 மாநிலங்களிலும் தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!

தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு அளிக்க உத்தரவு

தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவு
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


