அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

வாக்குப்பதிவு நாளான ஏப்.23-இல் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

News image

வாக்காளர் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 9:01 pm

வாக்குப்பதிவு நாளான வரும் 23-ஆம் தேதி தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் ச.அனிதா ரோஸ்லின் மேரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் வாக்குப்பதிவு செய்ய ஏதுவாக, வரும் 23-ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். புதுச்சேரி, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வரும் 9-ஆம் தேதியும், மேற்குவங்க மாநிலத்தில் 23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு வாக்குரிமை உள்ளதால், அவா்கள் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு செய்ய வசதியாக ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

விடுமுறை அளிக்காத தொழிற்சாலைகள் குறித்து மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு 0424 2219521, 2211780 ஆகிய தொலைபேசி எண்களிலும், ஈரோடு தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநா் அலுவலகத்துக்கு 9842291343, 9551621161 ஆகிய கைப்பேசி எண்களிலும் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.