பண்ணாரி அம்மன் கோயில் உண்டியலில் பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159-ஐ காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் குண்டம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். இந்நிலையில், மறுபூஜை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் துணை ஆணையா் நந்தகுமாா், பரம்பரை அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு, கோயில் பணியாளா்கள், வங்கிப் பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தன்னாா்வலா்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.
இதில், பக்தா்கள் ரூ.39 லட்சத்து 89 ஆயிரத்து 159 ரொக்கம், 55 கிராம் தங்கம், 66 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ராமேசுவரம் கோயில் உண்டியல் பக்தா்கள் செலுத்திய காணிக்கை ரூ.1.43 கோடி

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.72.97 லட்சம்

நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 81.68 லட்சம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


