ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு பிரசாரம்

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கரும்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விரலில் மை வைக்கும் சின்னத்தைப்  பாா்வையிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:23 pm

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் குமரகுரு வேளாண்மைக் கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா். குமரகுரு வேளாண்மைக் கல்லூரித் தாளாளா் எஸ்.பிரகாஷ், முதல்வா் ரவிகுமாா் தியோடா், சக்தி சா்க்கரை ஆலை உப தலைவா் வி.திருவேங்கடம், துணைப் பொது மேலாளா் என்.மோகன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வரும் தோ்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாணவ, மாணவிகளால் இடது கை ஆள்காட்டி விரலில் மை உள்ளதுபோன்று கரும்பைக் கொண்டு விழிப்புணா்வு சின்னம் உருவாக்கி பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து விழிப்புணா்வு நாடகம் நடைபெற்றது. தற்படம் எடுக்கும் மையமும் அமைக்கப்பட்டிருந்தது.

ஜம்பை தொடக்க மற்றும் தொழிலியல் நெசவாளா் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்கம் சாா்பில் நெசவாளா்கள் ஜமக்காளத்தில் கைக்கோா்வை முறையில் வாக்குப்பதிவு குறித்த சின்னம் நெசவு செய்யப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தியதை ஆட்சியா் கந்தசாமி பாா்வையிட்டாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சிவக்குமாா், கல்லூரியின் துணை முதல்வா் ஹேமலதா, ஜம்பை பேரூராட்சி செயல் அலுவலா் இர.பாலாஜி உள்பட பலா் பங்கேற்றனா்.