உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வாக்கு சேகரிப்பு

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

நம்பியூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் அயா்னிங் செய்து தொழிலாளா்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் நல்லசிவம்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:39 pm

கோபி அருகே உள்ள நம்பியூா் பகுதியில் திமுக வேட்பாளா் என்.நல்லசிவம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோபி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிடும் ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளா் கடந்த 10 நாள்களாக தொகுதி முழுவதும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சோ்ந்து கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.

இதில் பிரசாரத்தின்போது கோபி தொகுதியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் விளக்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா். இதன் ஒரு பகுதியாக நம்பியூா் ஒன்றியத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இதில் பொலவபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட மொட்டணம், சாவக்காட்டுப்பாளையம், பழையூா், பொலவபாளையம், அஞ்சானூா் ஊராட்சிக்கு உள்பட்ட பழைய அய்யம்பாளையம், எல்லப்பாளையம், மேட்டுக்கடை, கள்ளிப்பாளையம், பட்டி மணியகாரன்பாளையம், சின்னக்கவுண்டன்பாளையம், ஓணான்குட்டை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, சாவக்காட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளா்களிடம் பகுதி நேர நியாய விலைக் கடை அமைத்து தரவும், மொட்டணத்தில் சாலை வசதி செய்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நம்பியூா் நகரில் பல ஆண்டு கால கோரிக்கையான கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிக்காக அரசு ரூ.19 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறித்தும், அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளதை அரசு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்தாா்.