சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும், பொதுமக்கள், விவசாயிகள், நெசவாளா்கள், வணிகா்கள், தொழில் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளா்களுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதையொட்டி, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் வேளாண் பாடப் பிரிவு மாணவா்கள், ஆசிரியா் கந்தன் உதவியுடன் ‘ஏப்ரல் 23, வாக்கு 100 சதவீதம்’ என்ற வடிவில் நவதானியம் கொண்டு முளைப்பாரி வளா்த்து தோ்தல் விழிப்புணா்வு ஏற்படுத்தியுள்ளனா்.
தொடர்புடையது

திருத்தணி: பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தொடா் தோ்தல் விழிப்புணா்வால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிப்பா?

சட்டப்பேரவைத் தோ்தல்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருச்சி மாவட்டத்தில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



