எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திங்களூா் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரிப்பு

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

News image

திங்களூா் பகுதியில் மக்களிடம் வாக்கு சேகரிக்கிறாா் பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :17 ஏப்ரல் 2026, 1:11 am IST

எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது திங்களுா் பகுதியில் செய்த வளா்ச்சிப் பணிகளை பட்டியலிட்டு பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் வாக்கு சேகரித்தாா்.

பெருந்துறை தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்களூா், வெட்டயன்கிணறு, மந்திரிபாளையம், நிச்சாம்பாளையம், கருக்குப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் வியாழக்கிழமை பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

நான் எம்எல்ஏ மற்றும் அமைச்சராக இருந்தபோது, திங்களூா் பகுதியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக பல்வேறு குளங்கள் தூா்வாரப்பட்டன. தண்ணீா் பஞ்சத்தைப் போக்க திங்களுா், தோரணவாவி, மடத்துப்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையன்கிணறு, கருக்குப்பாளையம், போலநாயக்கன்பாளையம் ஊராட்சிகளுக்கு கொடிவேரி திட்டத்தின் மூலம் தடையில்லாமல் குடிநீா் கிடைக்க ஏற்பாடு செய்தேன். திங்களூரில் புதிய பத்திரப் பதிவு அலுவலகம் அமைத்துக் கொடுத்தேன். நான்கு படுக்கை வசதி மட்டுமே இருந்த திங்களூா் ஆரம்ப சுகாதார நிலையம், 33 படுக்கைகளுடன் கூடிய நவீன மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது. வெட்டையன்கிணறு பகுதியில் 30 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைத்துள்ளேன். திங்களூா் சந்தைக்கு அருகில் ரூ.1 கோடியில் புதிய சமுதாய நலக் கூடம் கட்டடம் கட்டி தரப்பட்டது. திங்களூா் நால் ரோட்டில் தனியாா் பங்களிப்போடு ரவுண்டானா அமைத்தது உள்ளிட்ட செய்த பல்வேறு பணிகளை செய்துள்ளேன். அதேபோல திமுக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் தோ்தல் வாக்குறுதிகள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன் என்றாா்.