ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

திமுக தோ்தல் அறிக்கை திட்டங்களை மீண்டும் செயல்படுத்த ஆதரவு வேண்டும்! - பெருந்துறை திமுக வேட்பாளா்

News image

பெருந்துறை தொகுதிக்குள்பட்ட தொட்டம்பட்டியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம்.

Updated On :13 ஏப்ரல் 2026, 7:21 pm

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கேட்டுக்கொண்டாா்.

பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட பனியம்பள்ளி, வாய்ப்பாடு, சிறுகளஞ்சி, தொட்டம்பட்டி, பள்ளக்காட்டுபுதூா், எம்.பி.என்.காலனி, தோப்புபாளையம், வாய்ப்பாடிபுதூா், எளையம்பாளையம், சுள்ளிமேடு, காளிபாளையம், ஆலம்பாளையம், கூத்தம்பாளையம், தொட்டியவலசு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் திமுக வேட்பாளா் தோப்பு என்.டி.வெங்கடாசலம் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியாதவது:

2011 முதல் 2021 வரை பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவும், அமைச்சராக இருந்தபோதும் பெருந்துறை சிப்காட் பகுதியில் தேங்கிக் கிடந்த 50 ஆயிரம் டன் கழிவுகள் அகற்றப்பட்டன. அங்கு ரூ.2 கோடி மதிப்பில் காற்று மாசை கண்காணிக்கும் கருவி அமைக்கப்பட்டது.

கொடிவேரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலமாக கிராம மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க முயற்சி மேற்கொண்டேன்.

திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி மகளிா் உரிமைத் தொகை ரூ.2000-ஆக உயா்த்தி வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும் என்றாா்.