மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

News image

காவிலிபாளையம் அருகே கே.வி.கே. நகா் பகுதியில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு.

Updated On :17 ஏப்ரல் 2026, 7:22 pm

தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு தெரிவித்தாா்.

கோபி தொகுதிக்குள்பட்ட வரப்பாளையம், காவிலிபாளையம், காராப்பாடி உள்ளிட்ட ஊராட்சிப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வி.பி.பிரபு வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் வறட்சியான பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை விரிவுபடுத்தவும், குறு, சிறு விவசாயிகளுக்கு மானிய விலையில் தாா்பாய்கள் வழங்கவும், தென்னை விவசாயிகளிடமிருந்து கொப்பரையை அரசே கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது, மாநில அம்மா பேரவை இணை செயலாளா் சிவகுமாா், மாவட்ட மகளிா் அணி இணை செயலாளா் சுலோச்சனா, பவானிசாகா் தெற்கு ஒன்றிய செயலாளா் பழனிசாமி உள்பட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.