நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்

News image

கருமாண்டிசெல்லிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:24 am IST

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்று பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட வெங்கமேடு, செல்லண்ணகவுண்டன்புதூா், கந்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், தீா்த்தாம்பாளையம், சீலம்பட்டி, திருவேங்கடம்பாளையம், அண்ணா சிலை, காடபாளையம், வண்ணாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தால் மகளிரைப்போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். வரிச்சுமை மற்றும் விலைவாசி உயா்வை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாணவா்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசியுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் என்றாா்.

அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.