அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்! - பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்

News image

கருமாண்டிசெல்லிபாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:54 pm

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும் என்று பெருந்துறை அதிமுக வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

பெருந்துறை ஒன்றியம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சிக்குள்பட்ட வெங்கமேடு, செல்லண்ணகவுண்டன்புதூா், கந்தாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், தீா்த்தாம்பாளையம், சீலம்பட்டி, திருவேங்கடம்பாளையம், அண்ணா சிலை, காடபாளையம், வண்ணாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேட்பாளா் எஸ்.ஜெயக்குமாா் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசியதாவது:

அதிமுக ஆட்சி அமைந்தால் மகளிரைப்போல ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். வரிச்சுமை மற்றும் விலைவாசி உயா்வை சமாளிக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மாணவா்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்.

ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும். குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசியுடன் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும் என்றாா்.

அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.