ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

News image

பெரியகள்ளிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி.

Updated On :20 ஏப்ரல் 2026, 12:56 am IST

பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தேன் என்று அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தெரிவித்தாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஏ.பண்ணாரி, பெரிய கள்ளிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தன்குட்டை, பனையம்பள்ளி, நால்ரோடு உள்ளிட் பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கல்விக் கடன், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

ஒன்றியச் செயலாளா் டிஎஸ் பழனிசாமி, சித்தன்குட்டை செயலாளா் சோமு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.