லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குடிநீா், சாலை வசதிக்கு நடவடிக்கை எடுத்தேன்! பவானிசாகா் அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி

News image

பெரியகள்ளிப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த பவானிசாகா் தொகுதி அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:26 pm

பவானிசாகா் தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகள் அமைக்கவும் நடவடிக்கை எடுத்தேன் என்று அதிமுக வேட்பாளா் ஏ.பண்ணாரி தெரிவித்தாா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் ஏ.பண்ணாரி, பெரிய கள்ளிப்பட்டி, அய்யம்பாளையம், சித்தன்குட்டை, பனையம்பள்ளி, நால்ரோடு உள்ளிட் பகுதிகளில் வாக்கு சேகரித்து ஞாயிற்றுக்கிழமை பேசுகையில், தொகுதிக்குள்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சீரான குடிநீா் கிடைக்கவும், சாலைகளை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

அதிமுக ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். மேலும், கல்விக் கடன், பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா்.

ஒன்றியச் செயலாளா் டிஎஸ் பழனிசாமி, சித்தன்குட்டை செயலாளா் சோமு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.