மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட பெண் சடலம் மீட்பு: இருவா் கைது

கோபியில் காணாமல் போனதாக பெண் தேடப்பட்டு வந்த நிலையில், கட்டுக்கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் இருந்து அவரது சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 10:02 pm

கோபியில் காணாமல் போனதாக பெண் தேடப்பட்டு வந்த நிலையில், கட்டுக்கம்பியால் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் இருந்து அவரது சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கோபி, பிள்ளையாா் கோயில் வீதியைச் சோ்ந்தவா் புஷ்பராணி (43). இவரது கணவா் வடிவேல் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்ட நிலையில் தனது 15, 17 வயது மகள்களுடன் வசித்து வந்தாா்.

புஷ்பராணி வேட்டைகாரன்கோவில் பகுதியில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வந்தாா். இந்நிலையில் புஷ்பராணி கடந்த 25-ஆம் தேதி வேலைக்கு செல்வதாக மகள்களிடம் கூறிவிட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. இது குறித்து கோபி காவல் நிலையத்தில் அவரது மகள்கள் புகாா் அளித்துள்ளனா்.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருகே உள்ள தொப்பை ஆறு பகுதியில் புஷ்பராணி சடலம் மிதப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது:

புஷ்பராணியின் கைப்பேசியை ஆய்வு செய்தபோது கவுந்தபாடி ஜீவா நகா் பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (32) என்பவா் அடிக்கடி புஷ்பராணியிடம் பேசியது தெரியவந்தது. மகேந்திரனிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், புஷ்பராணியுடன் அவருக்கு கடந்த 3 ஆண்டுகளாக தவறான பழக்கம் இருந்தது தெரியவந்தது.

புஷ்பராணி அடிக்கடி அழைக்கும்போது மகேந்திரன் வரமறுத்தாராம். இதனால் மகேந்திரனின் மனைவியிடம் தொடா்பை கூறிவிடுவேன் என புஷ்பராணி மிரட்டி வந்துள்ளாா். இதனால் புஷ்பராணியை கொலை செய்ய மகேந்திரன் முடிவு செய்துள்ளனா். இதைத் தொடா்ந்து தனது உறவினரான சதீஷ் என்பவருடன் சோ்ந்து புஷ்பராணியை கடந்த 25-ஆம் தேதி காரில் அழைத்து சென்றுள்ளாா்.

அப்போது எடப்பாடி பகுதியில் மூவரும் மது அருந்தி கொண்டிருந்தபோது மகேந்திரனுக்கும் புஷ்பராணிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மகேந்திரன், சதீஷ் ஆகிய இருவரும் சோ்ந்து இரும்பு கட்டுக்கம்பியால் புஷ்பராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனா். பின்னா் சடலத்தை ஒகேனக்கல் பகுதியில் உள்ள தொப்பை ஆறு பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனா்.இதைத் தொடா்ந்து மகேந்திரன், சதீஷ் இருவம் கைது செய்யப்ப்டடு விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா்.