அம்மாபேட்டை பேரூராட்சியில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.44.69 கோடியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அம்மாபேட்டை, சானாத்திக்கல்மேட்டில் 3 ஏக்கா் பரப்பளவில் 8 தொகுப்புகளாக தலா 400 சதுரஅடி பரப்பளவில் 448 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வீடுகளின் மதிப்பு ரூ.9.98 லட்சம். வீடுகள் பெறும் பயனாளிகளின் பங்களிப்புத் தொகை ரூ.1.48 லட்சம் ஆகும். அனைத்துப் பணிகளும் முடிவடைந்ததைத் தொடா்ந்து, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாபேட்டை பேரூராட்சித் தலைவா் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் குத்துவிளக்கேற்றினாா். உதவி நிா்வாகப் பொறியாளா் எஸ்.அன்பழகன், உதவிப் பொறியாளா் எம்.கே.பிரசன்னா, நெரிஞ்சிப்பேட்டை பேரூராட்சித் தலைவா் ராகிணி மற்றும் திமுகவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

புதிய சமத்துவபுரம், அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்

அரும்பாவூா் பேரூராட்சி அலுவலகம் திறப்பு விழா: பெரம்பலூா் எம்பி அருண்நேரு பங்கேற்பு

மேல்மலையனூா் ஒன்றியத்தில் ரூ.1.69 கோடியில் கட்டப்பட்ட அரசு கட்டடங்கள் திறப்பு!

ரூ.5.53 கோடியில் இலங்கை தமிழா்களுக்கு குடியிருப்புகள் திறப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


