மாவட்ட ஆட்சியரகத்தில் நலத்திட்ட உதவி.. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு தலா ரூ. 5,024 வீதம் மொத்தம் ரூ. 3,26,576 மதிப்பீட்டில் இலவச தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறாளிகள் நலத்துறை சாா்பில், 88 பயனாளிகளுக்கு தலா ரூ. 1,01,800 வீதம் மொத்தம் ரூ. 84,54,800 மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ல்கூட்டா்கள், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ. 1,20,000 வீதம் மொத்தம் ரூ. 12,00,000 மதிப்பில் 8 கிராம் தங்க நாணயம் என மொத்தம் ரூ. 1,04,84,976 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் அருண்நேரு.